பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு தூக்குத் தண்டனை! நீதிமன்றம் அதிரடி!

18 December 2019 அரசியல்
sureshangadi.jpg

யாராவது, போராட்டத்தினைக் காரணம் காட்டி, இரயில்வேக்கு சொந்தமானப் பொருட்களை சேதப்படுத்தினால், அவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட வேண்டும் என, பாஜக அமைச்சர் அதிரடியாகப் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் இருந்து, லோக் சபாவிற்கு சென்றுள்ள அமைச்சர் சுரேஷ் அன்காடி, நேற்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், நான் ரயில்வே அதிகாரிகளைக் கடுமையாக எச்சரிக்கின்றேன். யாராவது, பொதுச்சொத்துக்களையோ அல்லது இரயில்வேக்குச் சொந்தமான சொத்துக்களையோ, சேதப்படுத்தினால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துங்கள்.

சர்தார் வல்லபாய் படேல் போல, போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு கையாள வேண்டும் என, ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். மேலும், உள்ளூர் சிறுபான்மையினர் மற்றும் சில சாதியினரேப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறியுள்ளார். இவருடைய போராட்டத்திற்கு எதிரானப் பேச்சு, தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS