சுஷாந்த் சிங் குடும்பத்தில் மற்றொரு சோகம்! சகோதரர் மனைவி உயிரிழப்பு!

16 June 2020 அரசியல்
sushantsingh.jpg

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினைத் தொடர்ந்து, அவருடைய மூத்த சகோதரரின் மனைவியும் மரணமடைந்துள்ள சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுவரை, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என யாருக்கும் தெரியவில்லை. அவருடைய தற்கொலைக் காரணமாக, இந்தியத் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தோனியின் சுயசரிதைப் படத்தில் நடித்ததில் இருந்து, அவர் உலகம் முழுக்கப் பிரபலம் அடைந்தார்.

குழு நடனக் கலைஞராக இருந்து, நாடக நடிகராக மாறி பின்னர், துணை நடிகராக நடித்து, கடைசியாக கதாநாயகனாக நடித்து முன்னேறியவர் சுஷாந்த். அவர் நடித்த எம்எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம், பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அவருக்கென தனி ரசிகர் படையும் உண்டு. மிகவும் நேர்மையான அதே சமயம் மிகவும் நல்ல நடிகர் என்றப் பாராட்டினையும் பெற்றவர் சுஷாந்த். அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் மோடி உட்படப் பலரும் கவலையையும், வருத்தத்தினையும் பதிவு செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்த அவருடைய ஒன்று விட்ட மூத்த சகோதரரின் மனைவி சுதா தேவி என்பவர், மும்பையில் சுஷாந்திற்கு இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், அவருடைய சொந்த ஊரான பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணியாவில் திடீரென்று உயிரிழந்துள்ளார். இது தற்பொழுது சுஷாந்தின் குடும்பத்தில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS