வெளிநாட்டில் இந்தியர்கள் கண்ணீர் வடித்தால், முதலில் துடித்தவர் நம் சுஷ்மா!

07 August 2019 அரசியல்
ripsushma.jpg

பாஜக கட்சியின் ஈடு இணையில்லாத, பெண் தலைவராக சுஷ்மா சுவராஜ் இருந்து வந்தார். இவர் இன்று இயற்கை எய்தினார். தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பொழுது, சமூக வலைதளங்கள் மூலம் வரும் பதிவுகளுக்கும் விளக்கம் அளித்து, அதில் வரும் புகார்களுக்கும் நடவடிக்கை எடுத்தவர் என்றப் பெருமைக்குரியவர்.

தன்னுடைய 25வது வயதிலேயே ஹரியானா மாநிலத்தின் அமைச்சராக பொறுப்பேற்று சாதனை புரிந்தார். இந்திரா காந்திக்குப் பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சராக பணி புரிந்த பெண் என்றப் பெருமையையும் பெற்றார். தன்னுடைய பதவிக்காலம் முழுவதும், இந்திய மக்களுக்காகவும், கட்சிக்காகவும் அயராது பாடுபட்டவர். ஏழு முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் அரசியல்வாதி ஆவார்.

இவர் இறந்ததை தொடர்ந்து, இந்தியாவின் முக்கியத் தலைவர்களும், பாஜக தொண்டர்களும், திருமதி. சுஷ்மா சுவராஜ்ஜுன் உடலுக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

HOT NEWS