பாலியல் புகார் சுமத்தப்பட்ட உத்திரப்பிரதேச முன்னாள பாஜக மத்திய உறுப்பினரும், பிரபல சாமியாரான சின்னமயாநந்த் கைது செய்யப்பட்டார்.
அவருடைய அறக்கட்டளை நடத்தி வரும், சட்டக் கல்லூரியில் படித்த மாணவி, சுவாமி சின்மயாநந்த் மீது பாலியல் புகார் கூறினார். இதனையடுத்து, அவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினை, இந்திய உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
இதனைத் தொடர்ந்து, அவருடைய ஆசிரமம், ஆபிஸ், கல்லூரி, அவருடைய வீடு, அந்த மாணவியின் வீடு, ஹாஸ்டல், மற்றும் பல இடங்களில், விசாரணை செய்தது காவல்துறை. பின்னர், இருவரிடமும் பல மணி நேர விசாரணையையும் மேற்கொண்டது. இந்நிலையில், உடல்நலமில்லாததால் வீட்டிலேயே, மருத்துவ உதவி அவருக்கு செய்யப்பட்டது. இதனிடையே, சின்மயாநந்த்தை கைது செய்யாவிட்டால், நான் தீக்குளிப்பேன் என, பாதிக்கப்பட்ட மாணவி கூறினார்.
இதன் காரணமாக, இன்று காலை சுவாமி சின்மயாநந்த் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அரசு மருத்துவர்கள் அவர் உடலினைப் பரிசோதனைச் செய்கின்றனர்.