இதுவரை, தமிழக விமான நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், அறிவிப்புகள் வெளியாகி வந்தன. இதனிடையே இனி தமிழிலும் அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
தொடர்ந்து பலரும் தங்களுடைய சொந்த மொழிகளில், விமான நிலையங்களில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளிலேயே விமான அறிவிப்புகள் வெளியாகி வந்தது. இந்த இரண்டு மொழிகளும் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள், அவரவர் சொந்த மொழியில் அறிவிப்புகள் வெளியாவதே, அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்றுக் கூறி வந்தனர்.
அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விமானப் போக்குவரத்துத் துறை, இனி அவரவர் சொந்த மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியாகும் என கூறியுள்ளது. தமிழகத்தினைப் பொருத்தமட்டில், தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும், அவசரக் காலங்களிலும், எவ்விதப் பாரபட்சமுமின்றி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை, உடனடியாக அனைத்து விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.