ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழிக்காக தேவைப்பட்ட 14 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில், அந்த பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கை உறுதியானது.
தொடர்ந்து, உலகில் உள்ள பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்கள் இதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், போதிய அளவிலான பணம் திரளவில்லை. இந்நிலையில், அமெரிக்கா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டினர். சரியாக 14 கோடி திரண்டது.
இதனால், ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கை உறுதியானது. இதன் மூலம், அப்பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிப் பற்றிய ஆராய்ச்சியும், கல்வியும் செய்யப்படும்.