தெலுங்கானாவின் மலைவாழ் மக்களுடன் நடனமாடி, தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில், நேற்று மலைவாழ் மக்களின் வளர்ச்சி குறித்து, மலைவாழ்மக்கள் நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், விரைவில் மலைவாழ் மக்களுடன் தங்கி, அவர்களின் சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள் மற்றும் வாழ்வியலைப் பற்றித் தெரிந்து கொள்வதாக கூறியுள்ளார்.
பின்னர், அவரை சந்திக்க வந்திருந்த சில மலைவாழ் மக்களுடன் இணைந்து, பறை இசைக்கு ஏற்றபடி, அம்மக்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடினார் தமிழிசை.