pic credit:twitter.com
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று தெலுங்கானவின், ஆளுநராக பதவியேற்றார்.
ஆளுநராக அறிவிக்கப்பட்ட பின், தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை. பின்னர், இன்று காலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநராகப் பதவியேற்றார்.
தமிழ்நாட்டில் இருந்து, ஒரு பெண் ஆளுநராக பதவியேற்றது குறித்து பேசிய தமிழிசை, பாஜகவில் கடின உழைப்பிற்கு கண்டிப்பாக மதிப்பு அளிக்கப்படும் எனக் கூறினார். இதனை தற்பொழுது பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.