creidt:twitter.com/@udhaystalin
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, அனைத்துக் கட்சிகளும் தற்பொழுது நேர்காணல் நடத்தி வருகிறது. இதில் கமல்ஹாசனின் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை என, வெளிப்படையாக அறிவித்தது.
இந்நிலையில், திமுக கட்சியில் நடைபெற்று வரும், நேர்காணலில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், முகஸ்டாலின் அவர்களின் மகனுமான திரு. உதயநிதி ஸ்டாலின் விருப்பம் என, கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார்.
இருப்பினும், இது குறித்து, திமுக தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை. ஆனால், இதனை இளைஞரணித் தலைவரான உதயநிதி விருப்பமனு அளிக்கவில்லை. அதே சமயம், அது பற்றி உதயநிதி தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.