பொங்கல் பரிசுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

29 November 2019 அரசியல்
pongalgift.jpg

இன்று காலையில், பொங்கல் பரிசுத் திட்டத்தினை தமிழக முதல்வர். திரு. பழனசாமி துவக்கி வைத்தார். ஏற்கனவே அறிவித்தபடி, 1000 ரூபாய் பணம், பொங்கல் பொருட்களாக, கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை அடங்கியப் பையினை வழங்கினார்.

மேலும், இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார். அப்பொழுது, அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட பலரும் இருந்தனர். இன்று, முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுப் பணமாக 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

HOT NEWS