இன்று காலையில், பொங்கல் பரிசுத் திட்டத்தினை தமிழக முதல்வர். திரு. பழனசாமி துவக்கி வைத்தார். ஏற்கனவே அறிவித்தபடி, 1000 ரூபாய் பணம், பொங்கல் பொருட்களாக, கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை அடங்கியப் பையினை வழங்கினார்.
மேலும், இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார். அப்பொழுது, அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட பலரும் இருந்தனர். இன்று, முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுப் பணமாக 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (29.11.2019) "ரூ.1000 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு" வழங்கும் திட்டம் மற்றும் "விலையில்லா வேட்டி, சேலை" வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். #PongalGift #TNGovt pic.twitter.com/kFZZViyT7g
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 29, 2019