அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மாற்றப்பட்டது! அரசு அறிவிப்பு!

07 May 2020 அரசியல்
edappadicm1.jpg

தமிழக அரசின் ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயதினையும் அதிகரித்து, முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, தற்பொழுது அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில், பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், தற்பொழுது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பானது, 58 ஆக உள்ளது. அதனை 59 ஆக நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பானது, உடனடியாக அமல்படுத்தப்படுகின்றது எனவும், இது அனைத்து தமிழக அரசு பணியாளர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார். இதனால், அரசாங்க ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS