தமிழகத்தின் பல இடங்களில், மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்று தமிழகத்தில் ஆரம்பிக்க உள்ள நிலையில், நேற்று முதலே தமிழகம் முழுக்க கன மழைப் பெய்து வருகின்றது.
நேற்று இரவு, சென்னை, கோவை, திருச்சி, புதுச்சேரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை என பல மாவட்டங்களில், மழை பெய்தது. ஒரு சில மாவட்டங்களில், கன மழையும் பதிவாகி உள்ளது.
சென்ற ஆண்டு மழை போதிய அளவு பெய்யாததால், விவசாயிகள் கடும் பிரச்சனைக்கு ஆளாகினர். குடிநீர் இல்லாமல், பொதுமக்களும் பெரும் கஷ்டங்களைச் சந்தித்தனர். இந்நிலையில், இந்த ஆண்டாவது, நல்ல மழை அளவு உண்டாகும் எனப் பலரும் நம்புகின்றனர்.