வடகிழக்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

03 October 2019 அரசியல்
rain.jpg

வரும் அக்டோபர் 20ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்டப் பகுதிகளில், வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ளது. இதனை, வேளாண் பல்கலைக் கழக பயிர் மேலாண்மை பிரிவு இயக்குநர் கீதா லெட்சுமி கூறியுள்ளார்.

தற்பொழுது, தென் மேற்குப் பருவ மழையின் காரணமாக, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்டப் பகுதிகளில், இயல்பை விட நல்ல மழை பெய்துள்ளது.

மேலும், இந்த தென் மேற்குப் பருவ மழையானது, விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், மழையின் அளவு குறையும். பின்னர், அக்டோபர் 20ம் தேதி வடகிழக்குப் பருவ மழைத் தொடங்க உள்ளது. இதனால், தமிழகம், புதுவை, கேரளா மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

HOT NEWS