கடைகளின் பெயர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு! என்ன தெரியுமா?

12 March 2020 அரசியல்
tamilfont.jpg

தமிழகத்தில் இனி புதிதாக தொடங்க உள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளும் சரி, தற்பொழுது இயங்கி வரும் கடைகளும் சரி, தமிழில் தான் பெயரினை வைக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடைகளுக்கு வைக்கப்படும் பெயர் பலகைகளில், தமிழில் தான் பெயர்கள் இருக்க வேண்டும் என, தமிழகத் தொழில்துறையானது, அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்து, தமிழக தொழிலாளர் நலத்துறையானது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகைகளில், தமிழில் தான் பெயர்கள் முதன்மையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெயர் பலகையின் இரண்டாவது இடத்தில் ஆங்கிலத்திலும், மூன்றாவதாக பிற மொழிகளிலும் பெயர் இருக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனைப் பின்பற்றவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS