தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கன மழை!

01 October 2019 அரசியல்
rain.jpg

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், விருதுநகர் மாவட்டத்தின் வத்திராயிருப்பு பகுதியில் 15 செமீ, ஸ்ரீவில்லிபுத்தூர் 13 செமீ, நீலகிரி மாவட்டம் குந்தா அணைக்கட்டு பகுதியில் 11 செமீ, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் 7 முதல் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒரு சிலப் பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும். ஆகையால், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது, தமிழக வானிலை ஆய்வு மையம்.

HOT NEWS