தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது அக்னி நட்சத்திரம் முடிவிற்கு வந்துவிட்ட போதிலும், தொடர்ந்து கோடை வெயிலானது சுட்டெரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சாதாரண மழை முதல் கனமழை வரைப் பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவின் கடலோரப் பகுதிகளில், பலத்த சூரைக்காற்று வீசும் என்பதால், தமிழக மீனவர்கள் அப்பகுதகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றுக் கூறியுள்ளது.