FACEBOOKல் தற்கொலையை நேரலை செய்த தமிழர்! மனைவி கதறல்!

24 July 2020 அரசியல்
suicideattempt.jpg

சமூக வலைதளமான பேஸ்புக்கில் தன்னுடைய தற்கொலையை, நேரலையில் ஒளிபரப்பிய தமிழர் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளார்.

சமூக வலைதளங்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் பேஸ்புக்கில், தற்பொழுது நேரலை வசதியும் உள்ளது. இதனை, அனைத்துப் பயனர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைப் பலரும் ஆபாச செயல்களுக்காகவும், பிரச்சனைகளுக்காகவுமே பயன்படுத்தி வருகின்றனர். இதில் தற்பொழுது புதிய பரப்பான விஷயம் ஒன்று தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தினைச் சேர்ந்த, 37 வயதுடைய இளைஞர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இந்த லாக்டவுன் சமயத்தில், பேஸ்புக்கில் நேரலையில் வந்த இவர், தான் தற்கொலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். இதனைப் பார்த்த அவருடைய மனைவி, போலீசிற்குத் தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆனால், போலீசார் வீட்டிற்கு வந்து கதவைத் திறப்பதற்குள் அவர் மரணமடைந்து விட்டார். அவருடைய உடலைக் கைப்பற்றியப் போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறக்கும் முன், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்பில்லை எனவும், இது தன்னுடைய முடிவு எனவும் கூறியுள்ளார். இது அப்பகுதியில் வாழ்ந்தவர்களிடம் துயரத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS