விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வரும் என, அமைச்சர் தங்கமணி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்த, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன என, திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் தங்கமணி பேசினார். அவர் பேசுகையில், பூரண மதுவிலக்கே தமிழகத்தின் கொள்கை ஆகும்.
அதில் அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த, 6,815 டாஸ்மாக் கடைகளில், ஐந்நூறு ஐந்நூறாக தொடர்ந்து மூடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மதுவிலை உயர்ந்துள்ளதால், தமிழக அரசின் வருவாயும் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார்.