தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு உள்ளது. இதனை, தமிழக முதல்வர் திரு.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தென்காசியில், பல நலத்திட்டப் பணிகள் முடிந்துள்ளன. அவைகளை திறந்து வைத்தும், பல திட்டங்களை ஆரம்பித்தும் வைத்தார் முதல்வர் பழனிசாமி. இது குறித்து அவர் பேசுகையில், தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக, சங்கரன் கோவில் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கும், புதிய மாவட்டங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள வார்டுகளின் அடிப்படையில் தான், தேர்தல் நடைபெறும்.
தற்பொழுது, உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 251 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதே போல் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. என முதல்வர் பேசினார்.