தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்து உள்ளனர்.
இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், வருகின்ற ஜூலை மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து, அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ம் தேதி தொடங்கி, பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் சங்கம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், பத்தாம் வகுப்புத் தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என்றுக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கானது ஜூன் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியினை சந்தித்த, செங்கோட்டையன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது, கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், காலாண்டு பரிட்சையில் எடுத்த மதிப்பெண், அரையாண்டுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றினை 80% மதிப்பெண்ணாகவும், வருகைப் பதிவேட்டினை 20% ஆகவும் கணக்கிட்டு மொத்த மதிப்பெண்களை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு தமிழகத்தின் பல தலைவர்களும் தங்களுடைய வரவேற்பினையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் இது பற்றி வெளியிட்டுள்ள பதிவில்,
#10thPublicExam-ஐ ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக #COVID19 தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்! pic.twitter.com/OsQeDsnjsG
— M.K.Stalin (@mkstalin) June 9, 2020
இறுதியில், எதிர்க்கட்சியினரும், 10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வின்றியே வெற்றி பெற்று விட்டனர். #10thPublicExam
— SubaVeerapandian (@Suba_Vee) June 10, 2020
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையிலான குழு முடிவு செய்து, மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டுமோ, அந்த பாதுகாப்புகளை அளித்து, தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. #Corona #TNAgainstCorona #TNGovt #TNEducation #PublicExam
— K.A Sengottaiyan (@KASengottaiyan) June 3, 2020
இன்றைய பேசுபொருளான 10ம் வகுப்பு தேர்வு ரத்து பற்றி விவாதித்தால் அதற்கு காரணமான தலைவர் @mkstalin அவர்களை பாராட்ட வேண்டிவருமென்று கொரோனாவுடன் இன்று கரை ஒதுங்கிவிட்டனர். அடிமைகளை கண்டே அஞ்சுபவர்கள் உண்மையை எப்படி உரக்க பேசுவர்? @PTTVOnlineNews @News18TamilNadu @ThanthiTV @news7tamil
— Udhay (@Udhaystalin) June 9, 2020
காலம் தாழ்ந்தாலும் இறுதியாக மாணவர்களின் நலனையும், மக்களின் உணர்வையும் கோரிக்கையையும் மதித்து 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை, தமிழக அரசு ரத்து செய்து அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெற்றோர்களின் மகிழ்ச்சியில் இது தான் சரியான முடிவு என்பது உறுதியாகிறது. @CMOTamilNadu
— சீமான் (@SeemanOfficial) June 9, 2020
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 11-ஆம் வகுப்பில் ஒரு தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் ஒரு தேர்வை எழுதாத 35,000 மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்! #Cancel10thPUBLICEXAM
— Dr S RAMADOSS (@drramadoss) June 9, 2020
காலாண்டுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு பரிட்சை நடத்தப்பட்டது. அதனை 80% ஆக எடுத்துக் கொள்ள உள்ளனர். மேலும், அரையாண்டுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. அதனையும் 80% ஆக எடுத்துக் கொள்ள உள்ளனர். மொத்தமாக, கூட்டினால் ஒரு சதவிகிதம் வரும். அந்த சதவிகிதத்துடன் 20% மதிப்பெண்களை வருகைப் பதிவேட்டிற்காக இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.