பீகாரில் பதுங்கியிருந்த தீவிரவாதி கைது! காவல்துறை அதிரடி!

27 August 2019 அரசியல்
is.jpg

பீகாரில் வீட்டின் உள்ளேப் பதுங்கியிருந்த தீவிரவாதியை, பாதுகாப்புப் படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்தத் தீவிரவாதி வங்கதேசத்தில் நடைபெற்ற ஹோட்டல் குண்டு வெடிப்பிற்கு காரணமானவன் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தவுபிக் ரஸா எனப் பெயருள்ள அந்தத் தீவிரவாதி, பீகாரில் வீட்டில் சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். அவர் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர் என கண்டுபிடத்த பாதுகாப்புப் படையினர், அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம், பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் வேட்டையில், நம் இந்திய பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

HOT NEWS