லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி சுட்டுக் கொலை! இந்திய வீரர்கள் அதிரடி!

11 September 2019 அரசியல்
indiansoldiers.jpg

இந்திய இராணுவ வீரர்கள் சுட்டதில், லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளியான, ஆசிப் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில், தீவிரவாதிகள் பயதுங்கியிருக்கின்றனர் என்ற, உளவுத்துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் வருவதைக் கண்ட தீவிரவாதிகள் சற்றும் யோசிக்காமல், கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டனர்.

அதில், இரண்டு பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர். இதனால், தன்னுடைய பதிலடித் தாக்குதலை இந்திய இராணுவ வீரர்கள் தந்ததில், ஆசிப் என்ற பெயருடைய லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச் சேர்ந்த, தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், தற்பொழுது இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

HOT NEWS