ஜம்மூ-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில், பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தோடா மாவட்டத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புத் துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனால், அப்பகுதிக்கு விரைந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத்தினர், தோட மாவட்டத்தில் உள்ள கோண்டானா பகுதியில், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்பொழுது, அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி தப்பிக்க முயன்ற பொழுது, சுட்டுக் கொன்றனர். பின்னர் அவரைப் பற்றி விசாரிக்கையில், அந்த தீவிரவாதியின் பெயர் ஹாரூண் அப்பாஸ் எனவும், அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தினைச் சேர்ந்தவர் எனவும் கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தொடர்ந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் அதிகளவில் ஊடுருவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.