இந்தியாவிற்கு தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்! 20க்கும் மேற்ப்பட்ட தீவிரவாத முகாம்களால் உச்சகட்ட பாதுகாப்பு!

09 October 2019 அரசியல்
indiansoldiers.jpg

இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில், 20க்கும் மேற்ப்பட்ட தீவிரவாத குழுக்கள் காத்துக் கொண்டு இருப்பதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்தியாவின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம் தீட்டி வருவதாக, ஜம்மூ-காஷ்மீர் பகுதியின் டிஜிபி தில்பாக் சிங் கூறினார். மேலும், 200 முதல் 300 தீவிரவாதிகள் இதற்காக இந்தியாவின், எல்லைப் பகுதிகளில், காத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி, இந்திய இராணுவத்தினரைத் திசை திருப்பி, மறு பக்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.

சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம், அவர்களும் ஊடுறுவ முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும், இந்திய இராணுவத்தின் தீவிரக் கண்காணிப்பால், அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இருப்பினும், அவர்கள் காஷ்மீர் பகுதியின் பூஞ்ச், ரஜவுரி, உரி, கமா உட்பட முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS

S