தஞ்சை ஆவுடையார் திருக்கோயிலில், வருகின்ற பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடத்தப்படுகின்றது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தஞ்சை ஆவுடையார் கோயிலில் தமிழ் ஆகம விதிப்படியே நடத்தப்பட வேண்டும் எனவும், அங்கு தமிழிலேயே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
கரூராரின் வாரிசுகளும், இதனையே வேண்டுகோளாக விடுத்தனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டத் தலைவர்களும், தமிழிலேயே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இன்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆகம விதிப்படியே அங்கு குடமுழுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை, உயர்நீதிமன்றம் தற்பொழுது தள்ளி வைத்துள்ளது.