நெய்வேலி அனல்மின் நிலையத்தில் நடைபெற்றுள்ள விபத்தில், எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று மாலையில், திருச்சி கூடலூரில் அமைந்துள்ள நெய்வேலி அனல்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பணியாளர்கள் மற்றும் ஆறு ஒப்பந்தப் பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில், இருவர் கிட்டத்தட்ட முக்கால்வாசி எரிந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.