சமைத்துச் சாப்பிட்ட திருடன்! உரைப்புத் தாங்க முடியாமல் ஓடிய அவலம்!

04 October 2019 அரசியல்
thiefhome.jpg

தற்பொழுது திருடர்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் காமெடியாகவே சென்று முடிகின்றன.

திருச்சி சம்பவம் தற்பொழுது முடிந்துள்ள நிலையில், வேலூரில் உள்ள வாணியம்பாடியில் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூரில் உள்ள வாணியம்பாடியில், பாரூக் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவருடைய வீடு, 6 படுக்கறைகளுடன் கூடிய பெரிய வீடு ஆகும். இதனை ஒரு திருடன் நோட்டம் விட்டு வந்துள்ளான்.

பாரூக் குடும்பத்தாருடன், பெங்களூரு சென்று இருந்திருக்கிறார். அப்பொழுது, அவருடைய வீட்டின் பூட்டை உடைத்தத் திருடன், வீட்டிற்குள் நுழைந்துள்ளான். உள்ளே உள்ள அனைத்து அறைகளிலும் அலசி ஆராய்ந்துள்ள அவனுக்கு, ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் அங்கு அவர் ஒரு ரூபாயைக் கூட பீரோவில் வைக்கவில்லை.

இதனால், அந்த திருடன் கடும் விரக்தி அடைந்துள்ளான். அப்பொழுது, அவனுக்கு பசி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வீட்டின் சமையலறையில் உள்ள பாத்திரங்களைப் பயன்படுத்தி, சேமியாவையும் மாக்ரோணியையும் வேக வைத்து, அதில் மிளகாய் பொடியைப் போட்டு சமைத்துள்ளான்.

காரம் தாங்காமல், அந்த சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு, வேறு வழியில்லாமல், வெறும் கையுடன் வீட்டினை விட்டுத் தப்பிச் சென்றுள்ளான். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், திருடனைத் தேடி வருகின்றனர்.

HOT NEWS