pic courtesy:m.facebook.com/edits/?cid=2102003876578423
கடந்த ஜூன் 8ம் தேதி திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூர் பகுதியில், தாமிரபரணி ஆற்றில், அடையாளம் தெரியாத மர்ம நபர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என, யாருக்கும் தெரியவில்லை?
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை செய்து வெற்றிகரமாக, இறந்த கிடந்த நபரைப் பற்றியும், அவர் இறந்ததற்கான காரணத்தையும் கண்டுபிடித்து, அசத்தியுள்ளது நெல்லைக் காவல் துறை.
இறந்த கிடந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என, முதற்கட்ட விசாரணையில் நம் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
பின்னர் கொலை செய்தது ஐந்து பேர் எனவும், அதில் முருகன், மணிகண்டன், சுடலைமணி மற்றும் சுடலைசிவா ஆகியோரை, காவலர்கள் கைது செய்தும் அசத்தியுள்ளது.
இதற்குத் தற்பொழுது, சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. ஒரு கொலை வழக்கின் ஆதாரம் ஒரு வாரத்திற்குள் கிடைத்தால் மட்டுமே, எளிதாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். உலகில் நடைபெற்றுள்ள கொலைகளில் 50% கொலைகாரர்களை முதல் வாரத்தில் கண்டுபிடித்துள்ளனர் என்ற நிலையில், எவ்வித தடையமும் இல்லாமல், கொலைக்காரர்களை கண்டுபிடித்த நம்முடைய தமிழக போலீஸ் அனைத்துப் போலீசுக்கும் மேல் தான்.