திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைத் தாக்கி, பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக உள்ளது. இந்தக் கோயிலில் தெய்வானை என்ற 14 வயதுடைய யானையானது, வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த யானையானது, 2015ம் ஆண்டு அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றது.
இந்த யானையானது, கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளது. இந்த யானை ஏற்கனவே இரண்டு முறை, தன்னுடைய பாகனைத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த யானையானது ஊரடங்கின் காரணமாக வெளியில் செல்லாமல், அதன் இடத்திலேயே இருக்கின்றது. அந்த யானையை குளிப்பாட்டுவதற்காக பாகன் உதவியாளரான காளிதாஸ் அழைத்துச் சென்றார்.
குளத்தில் யானையைக் குளிப்பாட்டிக் கொண்டு இருக்கும் பொழுது, காளிதாஸை அந்த யானை பயங்கரமாகத் தாக்கியது. அதில் படுகாயம் அடைந்த காளிதாஸ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், அந்தக் கோயிலில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.