தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சாணி வீசியுள்ள மர்ம நபர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நேற்று இரவு, தஞ்சாவூரில் உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்தில், பொன் நிறத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, மீது மாட்டின் சாணியினை மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.
இது குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சாணி வீசியவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தாய்லாந்தில், தாய் மொழியில் திருக்குறள் நூலினை பாரதப் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிலையில், இத்தகைய சம்பவம் நடந்துள்ளது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடையக் கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.