பக்தர்களின் பலத்த கோஷத்துக்கு இடையில், திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.
கடந்த ஒன்றாம் தேதி அன்று, திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நாளான இன்று மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கோவிலுக்குள் உள்ள வைகுண்ட வாசல் வழியாக, பரணி தீபமானது மலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தயாராக வைக்கப்பட்டு இருந்து தீபக் கொப்பறையில், தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 3500 கிலோ நெய்யானது இந்தக் கொப்பறையில் ஊற்றப்பட்டு உள்ளது.
இந்தத் தீபத்தினைக் காண, தமிழகத்தின் பலப் பகுதிகளில் இருந்து திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா, என கோஷமிட்டனர். அடுத்த 11 நாளைக்கு இந்தத் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க உள்ளது.