பஞ்சாப் மாநிலத்தில், பெண் ஒருவர் தலையில் மூன்று குண்டுகளுடன் போலீஸ் ஸ்டேசன் சென்று, புகார் அளித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம், முக்த்சர் மாவட்டத்தில், சுமீத் கௌவர் என்ற 42 வயதுடையப் பெண் சுமார் ஏழு கிலோ மீட்டர் தலையில் துப்பாக்கி குண்டுகளுடன், காவல்நிலையம் சென்று அங்கு, தன்னுடைய சகோதரனும் அவருடன் இருந்தவரும் என்னைத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என, புகார் அளித்துள்ளார். அவருடையப் புகாரினை ஏற்றப் போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
இது பற்றி அவருடைய அளித்துள்ள புகாரில், என்னுடைய தந்தைக்கு 42 ஏக்கர் நிலம் இருந்தது. அவர் இறந்த பின், அவருடைய நிலத்தினை மூன்றாக பிரித்தோம். ஒரு பாகத்தினை எனக்கும், ஒரு பாகத்தினை என் தாய்க்கும், ஒரு பாகத்தினை என் சகோதரருக்கும் பிரித்துக் கொண்டோம். இதனிடையே என்னுடைய சகோதரர் என்னுடையப் பங்கையும் கேட்டு, சில வாரங்களாக மிரட்டி வருகின்றார். இடையிடையே என் மீது தாக்குதலும் நடத்தினார்.
தற்பொழுது, அவருடைய 10ம் வகுப்பு படிக்கும் மகனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, என்னைச் சுடச் சொல்லி அனுப்பியுள்ளார். அந்த பையனும் என்னைத் துப்பாக்கியால் சுட்டான். ஆனால், அவனிடம் இருந்து நான் தப்பித்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து, அப்பெண்ணின் தாய் கூறுகையில், இதற்கு முன்னர் பல முறை என்னுடைய மகன், நிலத்தினை அபகரிக்க முயற்சி செய்து, என் மகளைத் தாக்கியிருந்தான். தற்பொழுது துப்பாக்கியால் சுட்டுள்ளான். அவனுக்கு, தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.