நாடு மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும்! அமைச்சர் அறிவிப்பு!

21 September 2020 அரசியல்
rameshpokriyal.jpg

நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையேப் பின்பற்றப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்து உள்ளார்.

இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையினை அமலுக்குக் கொண்டு வருவதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கு தமிழகம் உட்படப் பல மாநிலங்கள் தங்களுடைய எதிர்ப்பினை தீவிரமாகக் காட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 2 மொழிக் கொள்கையேப் பின்பற்றப்படும் என, தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும் எனவும், மூன்றாவது மொழியாக அந்தந்த மாநில அரசுகளே, தேவையான மொழிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS