3 சேனல்களுடன் ஒப்பந்தம்! விரைவில் டிவியில் பாடங்கள்! செங்கோட்டையன் அதிரடி!

10 July 2020 அரசியல்
sengottaiyanka.jpg

தமிழகத்தின் 3 டிவி சேனல்களுடன் ஒப்பந்தம் நடைபெற்று இருப்பதாகவும், விரைவில் தமிழகத்தில் டிவி சேனல்கள் மூலம் பாடங்கள் எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அவர் பேசுகையில், தொலைக்காட்சிகள் மூலம், பள்ளிப் பாடங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதுவரை மூன்று டிவி சேனல்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன எனவும் கூறினார். பாடங்கள் மற்றும் பாட நிகழ்ச்சிகளுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

முதலமைச்சர் இந்த நிகழ்ச்சிகளை விரைவில் தொடங்கி வைப்பார் எனவும் கூறியுள்ளார். 12ம் வகுப்புத் தேர்வினை எழுத, 718 பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், விடுபட்டவர்கள் மொத்தம் 34,842 பேர் எனவும், அவர்கள் தேர்வு எழுத முன்வந்தால் அரசு உதவிகளை செய்யத் தயாராக உள்ளது எனவும், தேர்வு எழுதினால் தானே மதிப்பெண் வழங்க இயலும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS