டிக்டாக் இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை சீரழிக்கப் போகிறதோ? தோழியுடன் ஓடிய பெண்!

25 September 2019 அரசியல்
tiktok.jpg

இந்த டிக்டாக் செயலி வந்ததும் வந்தது, இந்தியா முழுக்க பலரும் தங்களுடைய வாழ்க்கையை இழந்துள்ளனர் என்றால், அது மிகையாகாது. அந்த அளவிற்கு, இதனை அழிவுப் பூர்வமாகவே பயன்படுத்துகின்றனர்.

அனைத்து விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், ஆக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், அதனைப் பயன்படுத்தும் முறையில் தான் அது ஆக்கத்திற்கா அல்லது அழிவிற்கா என, கூற முடியும்.

அந்த வரிசையில், தற்பொழுது சிவகங்கை மாவட்டப் பெண் டிக்டாக் மூலம், காணாமல் போய், மீண்டும் வந்துள்ளார்.

சிவங்கை மாவட்டம், தேவகோட்டைப் பகுதியில் உள்ள, கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினிதா. இவருக்கும், காளையார் கோவிலைச் சேர்ந்த லியோ என்பவருக்கும் இடையே, கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு, கடந்த மார்ச் மாதம் லியோ சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். இதனால், தனிமையில் தவித்து வந்தார் வினிதா. அப்பொழுது, அவருக்கு டிக்டாக் மூலம் வீடியோ வெளியிடுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அதில் கிடைத்த நண்பர்களுடன் பழகியும் உள்ளார். அதில், திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பற்றி தன்னுடைய கணவனுடனும் கூறியுள்ளார். ஒரு நாள் சிங்கப்பூரில் உள்ள லியோ, வினிதாக்கு தொலைபேசி மூலம், வீடியோ கால் செய்துள்ளார். அப்பொழுது, வினிதாவின் கையில், ஒரு பெண்ணின் டாட்டூவைக் கண்டு திகைத்துள்ளார். அதனைப் பற்றி விசாரிக்கையில், அது டிக்டாக் தோழி அபியின் உருவம் என்று கூறியுள்ளார். இதனைக் கடுமையாக கண்டித்துள்ளார் லியோ.

இந்நிலையில், மனைவிக்குத் தெரியாமல் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய லியோ, வினிதாவிடம் விசாரித்துள்ளார். இதனால், கடுப்பான வினிதா திடீரென்று காணாமல் போனார். இது குறித்து காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். வினிதா காணாமல் போகும் பொழுது, 25 பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலையில் காணாமல் போன வினிதா, காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவர் அதற்கு முன், நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், நான் 25 பவுன் நகைகளை எல்லாம் எடுத்துச் செல்லவில்லை. 6 பவுன் சங்கிலி மற்றும் கையில் பிரேஷ்லெட்டுடன் தான் சென்றேன் எனவும், தன் தோழி அபியின் அறிவுறுத்தலின்படியே, நான் இங்கு வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நான் திருமணத்தின் பொழுது எனக்குக் கொடுத்த நகைகளை அடகு வைத்துத் தான், என் கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தேன் எனவும், அவர் என்னிடம் கூறாமல், சந்தேகத்துடன் திரும்பி வந்து என்னைக் கண்டித்தார், என்னை அடித்தார் எனவும் கூறினார். இதனால், நான் என்னுடைய இன்னொரு தோழியான சரண்யாவின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தேன் எனவும் கூறினார்.

HOT NEWS