தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது பிரம்மோற்சவம்! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்!

08 October 2019 அரசியல்
thirumalai1.jpg

இன்று தீர்த்தவாரியுடன் திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவத் திருவிழா நிறைவடைய உள்ளது. கடந்த எட்டு நாட்களாக, நடைபெற்ற பிரம்மோற்சவ திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

கடந்த 30ம் தேதி, கொடியேற்றத்துடன் திருப்பதியில் பிரம்மோற்சவத் திருவிழா தொடங்கியது. இதனையடுத்து, திருமலை மலையப்பர் காலை மாலை என, இரு வேளைகளிலும் வெவ்வேறு அலங்காரங்களுடனும், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். இந்நிலையில், இன்று அதிகாலை சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி சேவை நடைபெற்றது. அதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் சக்கரத்தாழ்வாருக்கு, சேவை முடிந்ததும், பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், இன்று இரவு, மாட வீதிகளில், மலையப்பர் வலம் வர உள்ளார். அத்துடன் இன்று இரவு பிரம்மோற்சவம் நிறைவடைகின்றது. இந்த விழாவினை காண்பதற்காக, சுமார் பல லட்சம் பேர், திருமலையில் திரண்டுள்ளனர். ஏழுமலையானை தரிசிக்க ஒரு நாளுக்கும் மேலாக, காத்திருக்க வேண்டிய சூழ்நிலை தற்பொழுது உண்டாகி உள்ளது.

HOT NEWS

S