இருட்டுக் கடை அல்வா முதலாளி தற்கொலை!

25 June 2020 அரசியல்
iruttukadaihalwa.jpg

திருநெல்வேலி என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது, இருட்டுக் கடை அல்வா தான். அந்த அளவிற்கு, அந்த அல்வா உலகப் பிரசித்திப் பெற்றதாக இருந்து வந்தது.

அவ்வளவுப் பிரசித்திப் பெற்ற அந்த கடையின் உரிமையாளருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு உள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், உரிமையாளர் ஹரிசிங் உடல்நலக் குறைவினால் ஏற்பட்ட பயத்தால், விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. இது, அப்பகுதி மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS