ஏழுமலையானை நோக்கிக் கிளம்பியது திருப்பதி குடை! திரளான பக்தர்கள் திரண்டனர்!

28 September 2019 அரசியல்
tirupatikudai.jpg

திருப்பதியில் பிரம்மோத்தசவம் திருவிழா, தொடங்க உள்ளது. இதனையொட்டி, திருப்பதியை நோக்கி, திருப்பதி கொடை கிளம்பியது.

ஒவ்வொரு வருடமும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோத்சவத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவிற்கு தமிழகத்தில், கிட்டத்தட்ட சுமார் 150 வருடங்களாக சென்னையில் இருந்து, திருப்பதி கொடை அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தத வருடமும், சென்னையில் உள்ள திரு.சென்ன கேசவப் பெருமாள் கோவிலில் பூஜைகள் நடைபெற்று முடிந்த பின், வழி அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதிக் குடையினை வழியனுப்பி வைக்க, வழி நெடுகிலும் பக்தர்கள் குவிந்தனர். இந்தக் குடைகள், வரும் வியாழக் கிழமை திருப்பதி ஏழுமலையான் கோவிலை அடையும்.

பின், மலையப்பரின் ஊர்வலத்தில் அவருடன் ஊர்வலம் வரும். இந்தக் குடைகள் மீது, நாணயங்களை வீசுவதோ அல்லது பணத்தை வீசுவதோ கூடாது என, காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காணிக்கைகள் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளனர்.

HOT NEWS