இளம் வழக்கறிஞர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதில், வழக்கறிஞர் படிப்பினை முடித்துவிட்டு மூன்று ஆண்டுகள் ஆன பின்னரே, வழக்கறிஞர் பணிக்கு செல்ல முடியும் என்பதால், அவர்களுக்கு உதவித்தொகை வழங்க முதல்வர் முடிவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு, வறுமையில் வாடும் ஏழை எளிய இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.