நாளை மட்டும் அத்தியாவசியக் கடைகள் இந்த மாவட்டங்களில் இயங்கும்!

29 April 2020 அரசியல்
edappadicm1.jpg

நாளை(30-04-2020) சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை ஆறு மணி முதல் மாலை 5 மணி வரை, அத்தியாவசியக் கடைகள் இயங்கும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று (29-04-2020) புதன் கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவானது முடிவடையும் நிலையில், நாளை முதல் 26-04-2020க்கு முன்பு இருந்து நிலைப்படி ஊரடங்கு நீடிக்கும்.

எனினும், 30.4.2020 அன்று மட்டுமே, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க வேண்டும்.

1.5.2020 முதல், மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை ஆறு மணி முதல், மதியம் ஒரு மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து, மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுப்படுகின்றனர் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

HOT NEWS