தமிழகத்தில் செயல்பட்டு வந்த, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கடந்த மாதம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற தந்தை மற்றும் மகன் மரணத்தின் காரணமாக, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது புகார்கள் எழுந்தன. இது குறித்து அதிசயக் குமார் என்பவர், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதனை விசாரித்த ஆணையம், பிரண்ட்ஸ் ஆஃப் போலீசின் அதிகாரம் குறித்தும், அதன் அங்கீகாரம் குறித்தும் சராமாரியாகக் கேள்வி எழுப்பியது. இது குறித்து, நீதிமன்றமும் விளக்கம் அளிக்க தமிழக உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, தற்பொழுது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் செயல்படும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பானது, முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அமைப்பின் மீது தொடர்ந்து எழுந்தப் புகார்கள் காரணமாக, இந்த முடிவினை தமிழக அரசு எடுத்துள்ளது.