அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! ஸ்டாலின் போனில் விசாரிப்பு!

08 July 2020 அரசியல்
thangamani.jpg

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள், கொரோனா வைரஸ் தொற்றானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்டப் பல எம்எல்ஏக்கள் மற்றும் பல அரசியல்வாதிகளுக்கும் கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படு உள்ளனர். அதே போல், தற்பொழுது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் தற்பொழுது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கின்றதா என, சுகாதாரத்துறை ஊழியர்கள் சோதனை செய்துள்ளனர். அவருக்கு போன் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின், உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளார்.

HOT NEWS