இன்று காஷ்மீர் விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதில், திமுகவின் டி.ஆர்.பாலு பேசினார். அவர் பேசும் பொழுது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன், திரு. ஓ.பி.ரவீந்திரநாத் பேசுவதற்கு எழுந்து நின்றார். பின் அவர் டி.ஆர் பாலு பேசும் பொழுது குரல் கொடுத்தார்.
அப்பொழுது அவரைப் பார்த்து, கையை நீட்டி பேசிய டி.ஆர் பாலு, உங்களுக்கு முதுகெலும்பில்லை அமரு. இந்த நாடாளுமன்றம் முதுகெலும்பு உள்ளவர்களுக்கானது என கூறினார். இதனால், அவையில் கூச்சல் ஒரு பக்கமும், சிரிப்பு ஒரு பக்கமும் ஏற்பட்டது. அதே சமயம், ஓ.பி.ஆர் பேச முயற்சித்தார். அப்பொழுது திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி எழுந்து, அவைத் தலைவரிடம், பேசும் அவர் ஏன் குறுக்கிடுகிறார் எனக் கூறினார்.
இந்நிலையில், ஓபிஆர். பேசுகையில், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது தான் அம்மா அவர்களின் கொள்கையாக இருந்தது. அதற்காகவே, நாங்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தோம் எனக் கூறினார்.
முதுகெலும்பற்றவர்களைதான் BJP அடக்கி ஆளமுடியுமென மக்களவையில் TR பாலு பேச்சுக்கு ADMK MP OPR குறுக்கீடு செய்து எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றபோது,
— Surya Born To Win (@Surya_BornToWin) August 6, 2019
பாலு இடதுகையால் OPRஐ அமரச் சொல்லி "எங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறது,அதனால்தான் நாங்கள் இங்கே பேசுகிறோம்" என்று கலாய்ச்சிவிட்டுடடார் pic.twitter.com/3ul9zELBwk