முதுகெலும்பில்லாதவர் நீ அமரு! ஓபிஆர்ரை கூறிய டி.ஆர். பாலு!

06 August 2019 அரசியல்
trbaluvsopr.jpg

இன்று காஷ்மீர் விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதில், திமுகவின் டி.ஆர்.பாலு பேசினார். அவர் பேசும் பொழுது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன், திரு. ஓ.பி.ரவீந்திரநாத் பேசுவதற்கு எழுந்து நின்றார். பின் அவர் டி.ஆர் பாலு பேசும் பொழுது குரல் கொடுத்தார்.

அப்பொழுது அவரைப் பார்த்து, கையை நீட்டி பேசிய டி.ஆர் பாலு, உங்களுக்கு முதுகெலும்பில்லை அமரு. இந்த நாடாளுமன்றம் முதுகெலும்பு உள்ளவர்களுக்கானது என கூறினார். இதனால், அவையில் கூச்சல் ஒரு பக்கமும், சிரிப்பு ஒரு பக்கமும் ஏற்பட்டது. அதே சமயம், ஓ.பி.ஆர் பேச முயற்சித்தார். அப்பொழுது திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி எழுந்து, அவைத் தலைவரிடம், பேசும் அவர் ஏன் குறுக்கிடுகிறார் எனக் கூறினார்.

இந்நிலையில், ஓபிஆர். பேசுகையில், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது தான் அம்மா அவர்களின் கொள்கையாக இருந்தது. அதற்காகவே, நாங்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தோம் எனக் கூறினார்.

HOT NEWS