தெலுங்கானாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், பலர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் ரயில் நிலையத்தில், பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்தது கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில். அப்பொழுது, அதே வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த புறநகர் பயணிகள் ரயில் நேராக கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியது. இதனை எதிர்பார்க்காத பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த திடீர் விபத்தின் காரணமாக, ஒரு பயணி உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த நபர்களை, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தவறான சிக்னல் கொடுத்ததன் காரணமாக, புறநகர் பயணிகள் ரயிலானது, கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் தடத்தில் வந்துள்ளது. இதனால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.