பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது! போலீஸ் அதிரடி!

31 January 2020 அரசியல்
bjpmembertrichy.jpg

கடந்த சில தினங்களுக்கு முன், திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஐந்து பேரினைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 27ம் தேதி அன்று, பாஜகவின் பகுதி செயலாளர் விஜயரகு என்ற நபர், காந்தி மார்க்கெட் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது, அவரை பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டினர்.

இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயரகு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடந்த 27ம் தேதி அன்று, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பொழுது அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, முன்னாள் எம்பி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்பொழுது 29ம் தேதி மாலை நேரத்தில் இந்தக் கொலையில் ஈடுபட்ட ஐந்து பேரினைப் போலீசார் கைது செய்தனர். முகமது பாபு, ஹரிபிரசாத், சுடர் வேந்தன், சச்சின் மற்றும் முகமது யாசர் என்ற ஐந்து பேரும் இந்தக் கொலையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். இதனை அடுத்து, கைது செய்த நபர்களை, கமிஷனர் அலுவலகத்தில் கொண்டு வந்தனர். பின்னர், அங்கிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். குற்றவாளிகளை தற்பொழுது சிறையில் அடைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HOT NEWS