கடந்த வாரம் குழந்தைகள் ஆபாசப் படத்தினை பகிர்ந்தாலோ, பயன்படுத்தினாலோ அல்லது உருவாக்கினாலோ கைது செய்யப்படுவர் என, தமிழக குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றப்பிரிவு ஏடிஜிபியான டாக்டர்.ரவி ஐபிஎஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், திருச்சியினைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் உடனடியாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
சமூக வலைதளங்களில் நிலவன் மற்றும் ஆதவன் என்றப் போலிப் பெயரில், கணக்குத் தொடங்கி அதன் மூலம், குழந்தைகள் பாலியல் வீடியோவினை ஷேர் செய்ததற்காக அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். சாதாரண ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என, ஏற்கனவே ரவி ஐபிஎஸ் கூறியிருந்தார். மேலும், ஆபாச வீடியக்களை ஷேர் செய்வது குற்றம் எனவும் கூறியிருந்தார்.
தற்பொழுது, அல்போன்ஸ் ராஜ்ஜின் கணக்குடன் சுமார், 150 பேர் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.