கிருமிநாசினி ஊசி! ட்ரம்ப் அதிரடி பேச்சு! வச்சு செய்யும் அமெரிக்கர்கள்!

25 April 2020 அரசியல்
donaldtrumpcovid19.jpg

கிருமிநாசினியினை உடலில் செலுத்தி கொரோனாவை குணப்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவில் இந்தக் கொரோனா வைரஸ் பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், தற்பொழுது வரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 50,000க்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். இது குறித்து, தினமும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றார் அதிபர் ட்ரம்ப்.

அவர் பேசுகையில், கிருமிநாசியினை மனித உடலுக்குள் செலுத்தி, பின்னர் புற ஊதாக்கதிர்களை உடல் மேல் பாய்ச்சினால், இந்த வைரஸ் குணமாகும் என்று கூறினார். இதனால் அனைவரும் வியப்படைந்தனர். இது என்னடா புதுசா இருக்கு என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட சுகாதாரத் துறையினர், அவ்வாறு யாரும் செய்துவிடக் கூடாது என்றுக் கூறினர். இந்நிலையில், இது குறித்துப் பேசிய ட்ரம்ப் அது சும்மா, விளையாட்டிற்காக கூறப்பட்டது என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். இது தற்பொழுது சமூக வலைதங்களில் கேலிக்குள்ளாகி உள்ளது.

HOT NEWS