ஆறுகளை தூர்வாறுவதே, தமிழக கஜானாவைத் தூர்வாருவதற்குத் தான் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், திரு டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
இன்று நாகையில் உள்ள மயிலாடுதுறையில் நடைபெற்ற, நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவிதினகரன், ஏப்ரல், மே மாதங்களில் செய்ய வேண்டிய தூர்வாரும் பணியினை, மழை பெய்து கொண்டிருப்பது ஏன் என்பது பற்றி உங்களுக்கேத் தெரியும்.
டெல்டா மாவட்டங்களில், நீர் மேலாண்மை மேம்படுத்தப்படும் என முதல்வர் கூறினார். இப்பொழுது வரை எதுவும் இல்லை என்று கூறினார். கோடை காலத்தில் தூர்வார வேண்டும். ஆனால், தற்பொழுது தண்ணீர் திறந்துவிட்டப் பின் தூர்வாருவது தமிழக கஜானாவைத் தூர்வாருவதற்குத் தான்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம், அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளார் என பாமக தலைவர் பேசியுள்ளார். அவர் எந்தக் கூட்டணியில் இருக்கின்றாரோ, அந்த கூட்டணிக்கு ஆதரவாகப் பேசுவார். தற்பொழுது அதிமுகவிற்கு ஆதரவாகப் பேசுகிறார் என்றார்.