நேற்று சேலத்தில் பள்ளிக் கூடத்தில் வைத்து, டாஸ்மாக் டோக்கன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவருடைய பதிவில், சேலம் மாவட்டத்தில் காமலாபுரம் என்ற ஊரில், அரசு பள்ளிக் கூடத்தில் வைத்து டாஸ்மாக் மது விற்பதற்கான டோக்கன் வழங்கப்பட்டதாக வரும் செய்தி, பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வருமானம் பார்ப்பதற்காக எந்த எல்லைக்கும் பழனிசாமி அரசு செல்லும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.
கொரோனா நோய் பாதிப்பு, நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நேரத்தில், தமிழக அரசின் கவனம் முழுக்க மது விற்பதிலேயே இருப்பதைப் பார்க்கும் போது, அடுத்தடுத்து என்னென்ன விபரீதங்களை ஏற்படுத்தப் போகிறார்களோ என்ற பயமும் கவலையும் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் காமலாபுரம் என்ற ஊரில், அரசு பள்ளிக்கூடத்தில் வைத்து டாஸ்மாக் மது விற்பதற்கான டோக்கன் வழங்கப்பட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வருமானம் பார்ப்பதற்காக எந்த எல்லைக்கும் பழனிசாமி அரசு செல்லும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம். @CMOTamilNadu pic.twitter.com/m5zNRe4RtJ
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 8, 2020