ஒரு குழந்தைக்கு கோவிட் மற்றொன்றிற்கு கொரோனா! தம்பதிகள் பெயர் சூட்டினர்!

04 April 2020 அரசியல்
twinbabes.jpg

இந்திய நாடே, கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக வீட்டிற்குள் அடங்கி உள்ளது. அனைத்து சேவைகளும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. வர்த்தகமும், வணிகமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ருசீகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள தம்பதிக்கு இரட்டைக் குழந்தைப் பிறந்துள்ளது. இந்தக் குழந்தைகளில் ஒன்றுக்கு கொரோனா என்றும், மற்றொன்றிற்கு கோவிட் எனவும் பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய அக்குழந்தைகளின் தாய், பல சிரமங்களுக்குப் பிறகு, எனக்குக் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தப் பெயர்களைக் கேட்டால், பலருக்கும் வயிற்றில் புளியினைக் கரைக்கின்றது. இருப்பினும், எங்களுடையக் கஷ்டத்தின் பலனாக இவர்கள் பிறந்துள்ளதால், இவர்களுக்கு அப்பெயர் சூட்டியுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS